நவம்பர் 2019 முதல் இன்று வரையிலான பொருளாதாரக் நெருக்களை விசாரிப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான யோசனையை ஐக்கிய மக்கள் சக்தி இன்று (செப். 20) சபாநாயகரிடம் கையளித்துள்ளது.
இந்த பிரேரணையை கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கையொப்பமிட்ட கடிதத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைத்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.