விமல் தலைமையில் புதிய கூட்டணி உருவானது!

Date:

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுயாதீன கட்சிகள் ஒன்றிணைந்து, ‘மேலவை இலங்கை கூட்டணி’ என்ற புதிய கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ஸ தலைமையில்  இந்த நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்றது.

தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

கூட்டணியில் தலைவராக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, செயலாளராக விமல் வீரவன்ச. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. வீரசிங்க அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டணியின் தேசிய அமைப்பாளராக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர், முன்னாள் அமைச்சர்  ஹெல உறுமயவின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, பிரதித் தலைவர்களாக, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண அறிவிக்கப்பட்டுள்ளார்.

அங்குரார்ப்பண மாநாட்டிற்கு வருகைதந்த மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க வரவேற்றதுடன், பின்னர் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனத்தில் சுதந்திரக் கட்சி ஒன்றிய தலைவர்கள் கையொப்பமிட்டனர்.
இருக்கிறது அதன்பின், கூட்டணியின் பெயர் மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...