விமல் தலைமையில் புதிய கூட்டணி உருவானது!

Date:

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுயாதீன கட்சிகள் ஒன்றிணைந்து, ‘மேலவை இலங்கை கூட்டணி’ என்ற புதிய கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ஸ தலைமையில்  இந்த நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்றது.

தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

கூட்டணியில் தலைவராக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, செயலாளராக விமல் வீரவன்ச. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. வீரசிங்க அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டணியின் தேசிய அமைப்பாளராக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர், முன்னாள் அமைச்சர்  ஹெல உறுமயவின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, பிரதித் தலைவர்களாக, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண அறிவிக்கப்பட்டுள்ளார்.

அங்குரார்ப்பண மாநாட்டிற்கு வருகைதந்த மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க வரவேற்றதுடன், பின்னர் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனத்தில் சுதந்திரக் கட்சி ஒன்றிய தலைவர்கள் கையொப்பமிட்டனர்.
இருக்கிறது அதன்பின், கூட்டணியின் பெயர் மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...