SLFPயின் 71 வது வருட பூர்த்தி இன்று!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71 வது வருட பூர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யு ஆர்.டி பண்டாரநாயக்கவின் தலைமையில் கொழும்பு நகர மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய வருட பூர்த்தி நிகழ்வுகள் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த வருட பூர்த்தி நிகழ்வின் போது, கட்சியின் யாப்பு திருத்தப்படவுள்ளது.

இதற்காக இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை மத்திய செயற்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மத்திய செயற்குழுவில் அனுமதி கிடைக்கப்பெற்ற கட்சியின் யாப்பு திருத்த யோசனை அந்த செயற்குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.

தற்போது நான்காகவுள்ள சிரேஷ்ட உப தவிசாளர்களின் எண்ணிக்கையை 7 ஆக அதிகரிக்கவும், 10 ஆகவுள்ள உப தவிசாளர்களின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் புதிய திருத்தம் ஊடாக சிரேஷ்ட உப தவிசாளர்கள், உப தவிசாளர்கள், தேசிய அமைப்பாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்டோரை பதவி விலக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்ததாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Popular

More like this
Related

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்த 2வது வருடாந்திர கருத்தரங்கு: கொழும்பில்..!

மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தின் ஏற்பாட்டில், இலங்கை...

2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா மாத்தறையில்..!

2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா மாத்தறையில் நடைபெறவுள்ளது. சர்வதேச மகளிர்...

ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஈரான்...

எப்ஸ்டீன் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: ஊடகங்களை ஏமாற்றப் பயன்படுத்தப்பட்ட எப்ஸ்டீனின் போலி சடலம்!

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்த பிறகு, அவரது...