ஆசிய வங்கி ஆதரவுடன் இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் : ஜனாதிபதி

Date:

உலகில் எந்தவொரு நாட்டிலிருந்தும் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்தார்.

மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த யோசனையை முன்வைத்தார்.

கடந்த காலங்களில் இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர உதவிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு விளக்கமளித்தார்.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியில் பணியாற்றும் நிபுணர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Popular

More like this
Related

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் புனித குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாக்கம்: சுல்தான் அப்துல்லா வரலாற்று அறிவிப்பு!

மலேசியாவின் பகாங் (Pahang) மாநிலத்தில் குர்ஆனியக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 'புனித...

சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பதாரர்களில் 8% பேருக்கு உடல்நலக் குறைபாடு.

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License) கோரி விண்ணப்பித்தவர்களில் சுமார்...

விளையாட்டுத் துறையை மேம்படுத்த ஆசிய ரக்பி சம்மேளனம் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு!

துபாய், ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கையின் ரக்பி விளையாட்டை சர்வதேச...

சிறுவர் துஷ்பிரயோகம்: நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவை.

குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் தற்போது...