கொழும்பு கேக் சென்டரின் 05ஆவது பூர்த்தி விழாவும், கண்காட்சி நிகழ்வும்

Date:

கொழும்பு கேக் சென்டரின் 05 வருட பூர்த்தியை  முன்னிட்டு, கண்காட்சி நிகழ்வும்,  ஆண்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அதற்கமைய இதன் பணிப்பாளர்களான எம்.ரபீக் மற்றும் நுஸ்ரா அஹ்மத் அவர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது, கேக் பாடநெறியை பூர்த்தி செய்த மற்றும் ஒரு நாள் பாடநெறியில் கலந்து கொண்ட மாணவர்களின் பல வித்தியாசமான பல வகையான கேக் அலங்காரத்துடன் அண்மையில் கிருலப்பன பெஸ்ட் வெஸ்டேர்ன் எல்யொனில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

குறித்த இந்நிகழ்வில், கௌரவ அதிதியாக எக்ஸ்போ லங்கா குழு நிறுவனத்தின் பிரதம கணக்காளர் எம்.என்.எம்.நஸீம், நடுவராக விருது பெற்ற கேக் அலங்கரிப்பாளர் புஷ்ப பௌசி, பிரதம அதிதியாக நடிகை திருமதி தினுஷா ஸ்ரீவர்தன,மற்றும் பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்து இக் கண்காட்சியினை கண்டுகளித்தனர்.

கேக் பாடநெறியில் கலந்து கொண்டு கேக் அலங்காரம் செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கும் புஷ்ப கௌஷி புள்ளிகளை வழங்கியதோடு இதில் திறமையாக செய்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

-சில்மியா யூசுப்

Popular

More like this
Related

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் மாற்றம்!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த...

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு 950 தொன் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு.

டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான...

இந்தியா வரலாற்றில் ஒரு கருப்பு நாள்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று!

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 6, 1992...