பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பெறுமதியான உயிர்கள் மற்றும் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்தமை தொடர்பில் இலங்கை பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், H.E மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் புர்கி உடனான தொலைபேசி உரையாடலில், பிரதமர் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
இலங்கைப் பிரதமரின் அழைப்புக்கு நன்றி தெரிவித்த உயர்ஸ்தானிகர், இக்கட்டான நேரத்தில் அவரது ஆறுதல் மற்றும் ஆதரவு வார்த்தைகள் பாக்கிஸ்தான் மக்களுக்குப் பெரிதும் உதவுவதாகக் கூறினார்.