அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்று முதல் குறைப்பு!

Date:

லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய,   ஒரு கிலோ பூண்டின் புதிய விலை 490 ரூபாய், ஒரு கிலோ ரொட்டி மா புதிய விலை 320 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கடவை பருப்புவின்  புதிய விலை 285 ரூபாய், ஒரு கிலோ வெள்ளை சீனியின்  புதிய விலை 260 ரூபாய், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளை அரிசியின்   புதிய விலை 169 ரூபாய் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

1500 ரூபாயாக இருந்த ஒரு கிலோ நெத்திலியின் விலை 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1450 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...