இந்திய மராட்டிய மாநிலத்தில் வீதி விபத்து: 11 பேர் பலி!

Date:

இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேரூந்துப் பயணிகள் பலியாகினர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேரூந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதியபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டு வாகனங்களும் மோதிய நிலையில் பேரூந்து தீப்பற்றிக்கொண்டதாகவும்,  இதன் காரணமாக பேரூந்தில் இருந்து பயணிகளை வெளியேற்றுவதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமானவர்களில் ஒரு குழந்தையும் அடங்கியுள்ளது.

சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்து உள்ளனர் அத்துடன் சிலரின் நிலை கவலைக்கிடமாகவும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...