இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

நாட்டில் இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ரிட்ஜ்வே  சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை நிலைமை காரணமாக சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா பரவல்  அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இருமல், வாந்தி, காய்ச்சல் உள்ளிட்ட சில நோய் அறிகுறிகளுக்கமைய சிறுவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த வைரஸ் மீண்டும் சமூகத்தில் பரவ ஆரம்பித்துள்ளது. ஆகவே குழந்தைகள் சிறுவர்களை பாடசாலை, பாலர் பாடசாலைகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளவும் தொற்றுபரவாமல் இருக்கவும் பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

முக கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இன்புளுவன்சா வைரஸிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

டிட்வா சூறாவளியால் 43,991 பேர் பாதிப்பு

டிட்வா  சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த...

பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில் முத்து முஹம்மது...

நாட்டில் நிலவும் மோசமான வானிலை: ஜுமுஆத் தொழுகை தொடர்பாக ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்

இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண மற்றும் சவாலான சூழ்நிலையை முன்னிட்டு, அகில...

புயல் எச்சரிக்கை: நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று தொடரும்.

“டிட்வா” சூறாவளி மட்டக்களப்பிலிருந்து தென்மேற்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அட்சரேகை...