இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

நாட்டில் இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ரிட்ஜ்வே  சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை நிலைமை காரணமாக சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா பரவல்  அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இருமல், வாந்தி, காய்ச்சல் உள்ளிட்ட சில நோய் அறிகுறிகளுக்கமைய சிறுவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த வைரஸ் மீண்டும் சமூகத்தில் பரவ ஆரம்பித்துள்ளது. ஆகவே குழந்தைகள் சிறுவர்களை பாடசாலை, பாலர் பாடசாலைகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளவும் தொற்றுபரவாமல் இருக்கவும் பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

முக கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இன்புளுவன்சா வைரஸிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...