மேல் மாகாணத்தில் உணவுக் கழிவுகள் 40 வீதத்தால் குறைந்துள்ளது!

Date:

மேல் மாகாணத்தில் நாளாந்தம் வெளியேற்றப்படும் சமைத்த உணவின் அளவு சுமார் 40 வீதத்தால் குறைந்துள்ளதாக மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நளின் மன்னப்பெரும இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுநோய்க்கு முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, ​​இக்காலப்பகுதியில் வெளியேற்றப்படும் ஏனைய கழிவுகளும் சுமார் 20 வீதத்தால் குறைந்துள்ளது.

பிளாஸ்டிக் பொலித்தீன் உள்ளிட்டவற்றை கழிவுகளாக மறுசுழற்சி செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களை அகற்றுவதில்  பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளதாக மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மன்னப்பெரும  தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...