இலங்கையில் 4,000க்கும் மேற்பட்ட பொலிஸார் உடல் தகுதியற்றவர்கள்!

Date:

இலங்கை பொலிஸில் 4,000 க்கும் மேற்பட்ட பொலிசார் கடமையாற்றுவதற்கு உடல் தகுதியில்லாதவர்கள் என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.

நீண்டகாலமாக தரமான சுகாதார நிலையில் இல்லாத சுமார் 4,000 பொலிஸார் இருப்பதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

எனவே நீண்ட காலமாக தரம் வாய்ந்த சுகாதாரம் இல்லாத பொலிஸாரை பணி நீக்கம் செய்வது தொடர்பில் தேவையான யோசனையை தயாரித்து அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு அமைச்சர் டிரான் அலஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைவாக, மருத்துவ தரத்தை பூர்த்தி செய்யாத பொலிஸாரின் சேவையை நீக்குவது தொடர்பில் பொது பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.

பொலிஸ் சேவையில் நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாத பல உத்தியோகத்தர்கள் இருப்பதாகவும் அதனால் மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்து சிரமதான கடமைகளில் ஈடுபடுவதில்லை எனவும் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த வருடத்தில் பெருமளவிலான பொலிஸார் ஓய்வு பெறவுள்ளதாகவும், எனவே இந்த வருடத்தில் சுமார் 16,000 பொலிஸார் ஆட்சேர்ப்பு செய்வதற்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் குழு மேலும் கவனம் செலுத்தியது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...