உலகக் கோப்பையைக் காண கத்தாருக்கு தனியாக காரில் செல்லும் பெண்!

Date:

கத்தாரில் நடக்கும் FIFA உலகக் கோப்பை கால்பந்தாட்டம் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியை காண கேரளா மாநிலம் மாஹேயை சேர்ந்த நாஜி நௌஷி என்ற ஐந்து குழந்தைகளுக்கு தாயான பெண் தனியாக சாலை மார்க்கமாக கத்தார் செல்ல திட்டமிட்டுள்ளார்.

அதற்காக மஹேந்திரா தார் ஜீப்பை தயார் செய்து பயணத்தை தனியாக தொடங்கியுள்ளார்.

கால்பந்தின் திவீர ரசிகையும் , யூடியூபரும் ஆன நாஜி நௌஷி, கத்தார் நோக்கி தனது பயணத்தைத் தொடங்கினார்.

கோயம்புத்தூர் வழியாக மும்பையை அடைந்த பிறகு, அவர் தனது வாகனத்துடன் கப்பல் மூலம் ஓமனில் தரையிறங்குவார்.

அதன் பின்னர் அவர் சாலை வழியாக பயணம் செய்து கத்தாரை  ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா வழியாக சென்று அடைவார்.

கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் முன்னிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு இந்த பயணத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

Popular

More like this
Related

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...