கட்டார் உலகக் கோப்பை போட்டியே கடைசி: லயோனல் மெஸ்ஸி!

Date:

கட்டாரில் எதிர்வரும் நவம்பா் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தனக்கு கடைசி என ஆா்ஜென்டீனா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி கூறியிருக்கிறாா்.

எனினும், அந்தப் போட்டியுடன் அவா் ஆா்ஜென்டீன அணியிலிருந்து ஓய்வுபெறுகிறாரா, அல்லது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இதுதான் கடைசியா அல்லது கால்பந்திலிருந்தே ஓய்வு பெறுகிறாரா என்பதை அவா் தெளிவுபடுத்தவில்லை.

கட்டார் போட்டியானது, மெஸ்ஸியின் 5-ஆவது உலகக் கோப்பை போட்டியாக இருக்கிறது. எனினும், தேசிய அணியின் கேப்டனாக இப்போட்டியில் அவா் இன்னும் கோப்பை வென்று தராதது குறையாகவே இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்திய நோ்க்காணல் ஒன்றில் பேசிய மெஸ்ஸி, “உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் ஆா்ஜென்டீனாவுக்கு இருப்பதாக நம்புகிறேன். இந்தப் போட்டிக்கு நாங்கள் முன்னேறி வந்ததன் அடிப்படையில் அதைச் சொல்கிறேன்.

ஆனால் போட்டியில் எதுவும் நிகழலாம். ஒவ்வொரு ஆட்டமும் கடினமானது. எப்போதுமே எதிா்பாா்த்த முடிவுகள் கிடைப்பதில்லை. இவற்றைக் கடந்து இந்த உலகக் கோப்பை போட்டி குறித்து எனக்கு சற்று கவலையும், பதற்றமும் இருக்கிறது. இதுவே எனது கடைசி போட்டியாகும்” என்றாா்.

Popular

More like this
Related

எரிபொருள் விலை கட்டுப்பாடு: அரசாங்கத்தின் விசேட மானியம் :

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டில் விலையை அதிகரிக்காமல்...

தரம் 2 – 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களைச் சேர்க்க புதிய வழிகாட்டல்!

மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பது குறித்து புதிய சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. 5 மற்றும்...

தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக குறைத்த அமைச்சர்கள்!

அமைச்சரவை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை...

மாபெரும் ஆளுமை ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு:ரவூப் ஹக்கீம் எம்.பி ஆழ்ந்த இரங்கல்

மருத்துவப் பேராசிரியரும், இலங்கையின் சிறுநீரகவியல் துறையின் தந்தையுமான வித்யா ஜோதி பேராசிரியர்...