கட்டார் உலகக் கோப்பை போட்டியே கடைசி: லயோனல் மெஸ்ஸி!

Date:

கட்டாரில் எதிர்வரும் நவம்பா் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தனக்கு கடைசி என ஆா்ஜென்டீனா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி கூறியிருக்கிறாா்.

எனினும், அந்தப் போட்டியுடன் அவா் ஆா்ஜென்டீன அணியிலிருந்து ஓய்வுபெறுகிறாரா, அல்லது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இதுதான் கடைசியா அல்லது கால்பந்திலிருந்தே ஓய்வு பெறுகிறாரா என்பதை அவா் தெளிவுபடுத்தவில்லை.

கட்டார் போட்டியானது, மெஸ்ஸியின் 5-ஆவது உலகக் கோப்பை போட்டியாக இருக்கிறது. எனினும், தேசிய அணியின் கேப்டனாக இப்போட்டியில் அவா் இன்னும் கோப்பை வென்று தராதது குறையாகவே இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்திய நோ்க்காணல் ஒன்றில் பேசிய மெஸ்ஸி, “உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் ஆா்ஜென்டீனாவுக்கு இருப்பதாக நம்புகிறேன். இந்தப் போட்டிக்கு நாங்கள் முன்னேறி வந்ததன் அடிப்படையில் அதைச் சொல்கிறேன்.

ஆனால் போட்டியில் எதுவும் நிகழலாம். ஒவ்வொரு ஆட்டமும் கடினமானது. எப்போதுமே எதிா்பாா்த்த முடிவுகள் கிடைப்பதில்லை. இவற்றைக் கடந்து இந்த உலகக் கோப்பை போட்டி குறித்து எனக்கு சற்று கவலையும், பதற்றமும் இருக்கிறது. இதுவே எனது கடைசி போட்டியாகும்” என்றாா்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...