சமூக வலைதளங்களில் வைரலான ஆசிரியர்களின் நடனம் குறித்து அதிகாரிகளின் முடிவு!

Date:

அண்மைய நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பெண் ஆசிரியர்கள் நடனமாடும் காணொளி தொடர்பான விசாரணைகள் குறித்து மேல்மாகாண கல்வி திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கூட்டுச் செயற்பாடாகவே ஆசிரியையின் நடனம் தொடர்பான சம்பவம் வெளிவருவதாக அது தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் உரிய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கதிரான கனிஷ்ட கல்லூரியில் நடைபெற்ற சிறுவர் தின கொண்டாட்டத்தின் போது பாடசாலை ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் நடனமாடுவதைக் காட்டும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...