ஜனாதிபதி மாளிகையை புனரமைக்க பொது நிதியிலிருந்து 364.8 மில்லியன் ரூபா!

Date:

மக்கள் போராட்டத்தின் போது சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகளுக்கு சுமார் 364.8 மில்லியன் ரூபா செலவாகும் என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மதிப்பிட்டுள்ளது.

அதேநேரம், மாளிகையின் மரத்தளபாடங்கள், வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மைய உபகரணங்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை.

இந்த திருத்தப்பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தின் கீழ், அரசாங்கத்தின் முக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய வகையிலும், பிற விசேட நிகழ்வுகளை நடத்துதற்கு தகுந்த வகையிலும் ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படும்.

அதேவேளை, இரண்டாவது கட்டத்தின் கீழ், மாளிகையின் தங்குமிடங்கள் மற்றும் அலுவலக அறைகள் புனரமைக்கப்படவுள்ளன.

Popular

More like this
Related

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...