டுவிட்டரை வாங்குவதற்கு முடிவு!

Date:

டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டதால் அவர் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருக்கும் நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் 54.20 டொலருக்கு வாங்குவதற்கு எலான் மஸ்க் தீர்மானித்துள்ளார்.

சமூக வலைதளமான டுவிட்டரை வாங்குவதற்கு எலான் மஸ்க் முன்னர் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து 44 பில்லியன் டொலருக்கு அதனை அவருக்கு விற்பதற்கு டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரலில் முடிவு செய்திருந்தது.

இதற்கிடையில் டுவிட்டரில உள்ள போலிக் கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உட்பட சில விபரங்களைத் தரும்படி டுவிட்டர் நிர்வாகத்தடம் எலான் மஸ்க் கோரியிருந்தார்.

2 மாதங்களாகியும் இந்தத் தகவல்கள் கிடைக்காததனால் டுவிட்டரை வாங்கும் முடிவை எலான் மஸ்க் கைவிட்டிருந்தார்.

இதனையடுத்து எலான் மஸ்க் மீது டுவிட்டர் அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தது.

இந்நிலையிலேயே டுவிட்டரின பங்குகளை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...