தொலைத்தொடர்பு கட்டண அதிகரிப்பு குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரல்!

Date:

தொலைத்தொடர்பு நிறுவனங்களினால் அண்மையில் மீண்டும் அதிகரிக்கப்பட்ட கட்டண அதிகரிப்பு தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற தீர்மானித்துள்ளது.

கட்டண அதிகரிப்பு தொடர்பில் அந்த நிறுவனங்களினால் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட சமர்பணங்களுக்கு அமைய இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கட்டண அதிகரிப்புக்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது.

இதன்படி, குறித்த நிறுவனங்களால் தங்களது சேவை கட்டண அதிகரிப்பு தொடர்பிலான சட்ட பின்னணிகளை தெளிவுப்படுத்தியுள்ளது.

2.5 சதவீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்புக்கமைய கடந்த 5 ஆம் திகதி முதல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டும் ஒரு முறை தமது கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...