போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்: நாமல்

Date:

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பாவி இளைஞர், சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்களை கைது செய்து பொலிஸில் புகார் அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் செய்வது தவறு என்றும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெலிமடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேநேரம், தனது வீடு, மனைவி வீடு மற்றும் தந்தையின் வீட்டிற்கு தீ வைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் போராட்டத்திற்கு வந்த இளைஞர், சிறுவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதால் எந்த பலனும் ஏற்படாது என்றார்.

அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தின் மூலம் சமூகமயப்படுத்த வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...