மண்சரிவு எச்சரிக்கை: நாளை வரை நீடிப்பு!

Date:

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நாளை பிற்பகல் 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக காலி மாவட்டத்தின் அக்மீமன, பத்தேகம, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்த நுவர, வலல்லாவிட்ட, தொடங்கொட, இங்கிரிய மற்றும் புலத்சிங்கள மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ ஆகிய பகுதிகளுக்கு 02 ஆம் கட்டத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், தொடர்ந்து மழை பெய்யுமாயின், மண்சரிவு, பாறைகள் சரிவு, மண்மேடு சரிவு குறித்து அவதானமாக இருக்குமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராகுமாறும் இந்த பிரதேச மக்களை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, காலி மாவட்டத்தில் யக்கலமுல்ல, நாகொட, களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, மில்லனிய, அகலவத்தை, கேகாலை மாவட்டத்தில், மாவனெல்ல, புலத்கொஹூபிடிய, வரகாபொல, ருவன்வெல்ல, எட்டியந்தோட்டை, தெரணியகலை, இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, குருவிட்ட, இரத்தினபுரி, நிவித்திகல, ஹெலியகொட, அயகம மற்றும் கிரியெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் குருவி, நிஹெல்யகோ, இரத்தினபுரி, நிஹெல்யகோ, நிஹெல்யகொட, கலவான, குருவிட்ட, நிவித்திகல, அஹெலியகொட, அயகம மற்றும் கிரியெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...