மறைந்த தேரரின் இறுதிக் கிரியைகள் அரச அனுசரணையுடன் மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை!

Date:

மறைந்த அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி வடமத்திய மாவட்ட பிரதான சங்க தலைவர் கலாநிதி   பல்லேகம ஸ்ரீநிவாச  தேரரின் இறுதிக்கிரியைகளை பூரண அரச அனுசரணையுடன் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர்  மஹிபால ஹேரத் ஆகியோர் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நாட்டிலுள்ள மகா சங்கத்தினரிடையே முக்கிய பங்காற்றிய வணக்கத்திற்குரிய பல்லேகம ஸ்ரீநிவாச  தேரர், ரஜரட்ட மக்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரினதும் நலனுக்காக தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்த சங்கப் பிதாவாகும்.

தற்போது தகனக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை 22ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

Popular

More like this
Related

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...

இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ...