லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு!

Date:

லிட்ரோ கேஸ் நிறுவனம் மேலும் ரூ.7.5 பில்லியனை திறைசேரிக்கு திருப்பிச் செலுத்தியுள்ளது.

இதன் காரணமாக நவம்பர் முதல் வாரத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலை மேலும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

“லிட்ரோ எரிவாயு நிறுவனம், நாங்கள் உறுதியளித்தோம், உலக வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன் தொகை இன்னும் பெறப்படுகிறது. ஆனால் எரிவாயு நெருக்கடியைத் தீர்க்க நாங்கள் ஆரம்ப பங்குகளைப் பயன்படுத்தினோம். நாங்கள் மீண்டும் ரூபாயில் செலுத்தத் தொடங்கினோம். செப்டம்பரில் நாங்கள் 6.5 பில்லியன் செலுத்தினோம். ஒக்டோபரில் 7 பில்லியன் சொலுத்தினோம். வெள்ளிக்கிழமை இறுதிக்குள் மேலும் 7.5 பில்லியனை செலுத்திவிட்டோம். லிட்ரோ எரிவாயு நிறுவனம் என்ற வகையில் இது எங்கள் பொறுப்பு. எஞ்சியுள்ள கடனை டிசம்பர் மாதத்திற்குள் செலுத்திவிடுவோம் என நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக இந்த நேரத்தில், உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை நாங்கள் அவதானித்து வருகிறோம். அதன்படி, நவம்பர் மாத தொடக்கத்தில் எரிவாயு விலையை மீண்டும் குறைப்பது குறித்து யோசித்து வருகிறோம்” என முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 05ஆம் திகதி 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 271 ரூபாவால் குறைக்கப்பட்டது.

12.5 லிட்டர் சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது 4,280ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...