வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Date:

2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு- செலவுத்திட்டம்) பாராளுமன்றத்தில் (முதலாவது மதிப்பீட்டுக்காக) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

பின்னர், நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இன்று வரைவு சட்டமூலத்தின் முதல் வாசிப்பை திட்டமிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

2023ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு ஆகஸ்ட் 22ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டிற்கான மொத்த தொடர் செலவீனம் ரூ. 4,634 பில்லியன் மொத்த மூலதனச் செலவு ரூ. 3,245 பில்லியன்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...