ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: முதல் ஒன்பது மாதங்களில் 32 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு!

Date:

ஹிக்கடுவ, திராணகம சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவர்  காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 32 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய விசேட குற்றச்செயல்களை தடுப்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் தென் மாகாணத்தில் புதிய பொலிஸ் பிரிவும் ஸ்தாபிக்கப்பட்டது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...