இந்திய மராட்டிய மாநிலத்தில் வீதி விபத்து: 11 பேர் பலி!

Date:

இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேரூந்துப் பயணிகள் பலியாகினர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேரூந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதியபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டு வாகனங்களும் மோதிய நிலையில் பேரூந்து தீப்பற்றிக்கொண்டதாகவும்,  இதன் காரணமாக பேரூந்தில் இருந்து பயணிகளை வெளியேற்றுவதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமானவர்களில் ஒரு குழந்தையும் அடங்கியுள்ளது.

சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்து உள்ளனர் அத்துடன் சிலரின் நிலை கவலைக்கிடமாகவும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல...

பங்களாதேஷில் இன்று பொதுத்தோ்தல்:இந்தியாவுடனான உறவு இயல்புக்கு திரும்புமா?

அண்டை நாடான பங்களாதேஷில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை...