இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேரூந்துப் பயணிகள் பலியாகினர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேரூந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதியபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இரண்டு வாகனங்களும் மோதிய நிலையில் பேரூந்து தீப்பற்றிக்கொண்டதாகவும், இதன் காரணமாக பேரூந்தில் இருந்து பயணிகளை வெளியேற்றுவதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமானவர்களில் ஒரு குழந்தையும் அடங்கியுள்ளது.
சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்து உள்ளனர் அத்துடன் சிலரின் நிலை கவலைக்கிடமாகவும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.