இன்று உலக உணவு தினம்: உணவு வீணாவதை தடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்!

Date:

நாட்டில் உணவு நெருக்கடி நிலவும் இவ்வேளையில், பஃபே முறையில் உணவு விற்பனை செய்யப்படும் இடங்களில் சுமார் 50 வீதமான உணவுக் கழிவுகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் வேளாண் விஞ்ஞானி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்தார்.

இதன்போது, இதுபோன்ற உணவு வீணாவதை தடுக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் நாட்டில் நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறு உணவு வீணாவதை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று சர்வதேச உலக உணவு தினத்தை முன்னிட்டே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...