உணவின் தரம் குறித்து ஆய்வு: சுகாதார அமைச்சு

Date:

நாட்டு மக்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இறக்குமதி மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணப் பொருட்களின் தரத்தை நிலைநிறுத்த இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வுக்காக 25 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவு வகைகள் தேர்ந்தெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாதிரி சேகரிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து கவலைகள் எழுந்த நிலையிலேயே,  பல்வேறு வகையான உணவுகள் குறித்து ஆய்வு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...