உயர்தர திரிபோஷ தொடர்ந்து வழங்கப்படும்:சுகாதார அமைச்சர்

Date:

இந்த நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தொடர்ந்தும் உயர்தர திரிபோஷ மாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

திரிபோஷ தொடர்பில் அண்மைய நாட்களில் வெளியான உண்மைகளை ஆராய்ந்து கலந்துரையாடுவதற்காக தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழுவுடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, தெற்காசியாவிலேயே குழந்தைகளுக்கு இவ்வாறான ஊட்டச் சத்துக்களை வழங்கும் ஒரே நாடு இலங்கை என்றும் அமைச்சர் கூறினார்.
இதற்கு தேவையான அதிகபட்ச ஒதுக்கீடு திறைசேரியிலிருந்து ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரிபோஷாவுக்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு மேலதிகமாக சில தனியார் நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் திரிபோஷ திட்டத்தில் எந்த செயலிழப்பும் ஏற்படவில்லை என்றும், உணவு பணவீக்கத்தை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...