எங்களுக்கு இழப்பீடு வேண்டாம்: சர்வதேச விசாரணை தேவை!

Date:

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் இன்று, ஒக்டோபர் 17 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

காணாமல் போனோர் அலுவலகம் மூலம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை தாங்கள் நிராகரிப்பதாகவும், அவர்களின் குறைகள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஒக்டோபர் 11ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, மேலதிகமாக காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 100,000. வழங்க குறிப்பிட்டிருந்தார்.

Popular

More like this
Related

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...