ஓய்வுபெறும் வைத்தியர்களின் சேவைக்காலம் நீடிப்பு!

Date:

60 வயதை பூர்த்தி செய்த அரச சேவையில் உள்ள வைத்தியர்கள் ஓய்வுபெறும் வரை அதிகபட்சமாக மேலும் ஒரு வருடம் சேவையாற்றுவதற்கு அமைச்சரவை திங்கட்கிழமை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடக, நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு அனைத்து மருத்துவர்களும் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

60 வயதில் வைத்தியர்கள் ஓய்வுபெறுவதால் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையை பரிசீலித்த அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது 63 வயதை பூர்த்திசெய்துள்ள வைத்தியர்கள் மாத்திரம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஓய்வுபெற வேண்டும்.

அத்துடன், தற்போது 62 வயதை பூர்த்தி செய்துள்ளவர்கள் 63 வயதாகும்போதும், 61 வயதை பூர்த்திசெய்தவர்கள் 62 வயதாகும்போதும், 60 வயதை பூர்த்தி செய்தோர் 61 வயதாகும்போதும், 59 வயதை பூர்த்திசெய்தோர் 60 வயதாகும்போதும் புதிய வருடத்தில் ஓய்வுபெறவேண்டும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, குறித்த சேவைகால நீடிப்பு ஓராண்டில் முடிவடையும் எனவும், அதன் பின்னர் அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் 60 வயதில் வைத்தியர்கள் ஓய்வுபெற வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மையில், இவ்வருடத்தின் இறுதி நான்கு மாதங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட இடைக்கால பாதீட்டுக்கமைய, அரச ஊழியர்களின் வயதெல்லை 65 இலிருந்து 60 ஆக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...