கனியவள சேவையாளர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில்!

Date:

கனிய வள சேவையாளர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

கனிய வள பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள கனியவள உற்பத்திப் பொருட்கள் குறித்த திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொழிற்சங்க போராட்டம் காரணமாக இன்றைய தினம் எரிபொருள் விநியோக செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 6 மாதங்களாக கனிய வள சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், எந்தவொரு ஊழியரோ அல்லது தொழிற்சங்கமோ அத்தியாவசிய விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்டரீதியான மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பதிவில் குறப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒருமித்துச் செயற்பட வேண்டும்!

-என்.எம்.எம்.மிஃப்லி முன்னாள் இறைவரி திணைக்கள ஆணையாளர்.       முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலம்: ஆண் பெண்...

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன்...

பெண்ணியம் பேசிய அதிகாரியின் மறுபக்கம்: ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஹிந்த் அல் ஒவைஸ்.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein)...