கோதுமை மாவின் விலை குறையுமா?

Date:

எதிர்வரும் வாரத்தில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சுமார் நூறு மா கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் அவற்றை இறக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மா தொடர்பில் பாரிய பிரச்சினை இருப்பதை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்த நளின் பெர்னாண்டோ,

இந்த நாட்டில் மாவை உற்பத்தி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் டொலர் பற்றாக்குறையினால் போதியளவு கோதுமை தானியங்களை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் இந்தியாவில் இருந்து கோதுமை மாவை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும், இறக்குமதியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மாவின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...