ஜனாதிபதி மாளிகையை புனரமைக்க பொது நிதியிலிருந்து 364.8 மில்லியன் ரூபா!

Date:

மக்கள் போராட்டத்தின் போது சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகளுக்கு சுமார் 364.8 மில்லியன் ரூபா செலவாகும் என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மதிப்பிட்டுள்ளது.

அதேநேரம், மாளிகையின் மரத்தளபாடங்கள், வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மைய உபகரணங்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை.

இந்த திருத்தப்பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தின் கீழ், அரசாங்கத்தின் முக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய வகையிலும், பிற விசேட நிகழ்வுகளை நடத்துதற்கு தகுந்த வகையிலும் ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படும்.

அதேவேளை, இரண்டாவது கட்டத்தின் கீழ், மாளிகையின் தங்குமிடங்கள் மற்றும் அலுவலக அறைகள் புனரமைக்கப்படவுள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...