டி-20 உலகக் கோப்பைக்காக இலங்கை அணி ஆஸ்திரேலியா புறப்பட்டது!

Date:

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.

29 பேர் கொண்ட இந்தக் குழுவில் 17 வீரர்களும் 12 அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

இந்த அதிகாரிகளில் தலைமைப் பயிற்சியாளர், உதவிப் பயிற்சியாளர்கள், மேலாளர், வேகப் பயிற்சியாளர், சுழல் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை 03.30 மணியளவில் எமிரேட்ஸ் விமானமான EK-649 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் இலங்கை அணி துபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு நேரடியாக விமானம் மூலம் செல்லவுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...