டி-20 உலகக் கோப்பைக்காக இலங்கை அணி ஆஸ்திரேலியா புறப்பட்டது!

Date:

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.

29 பேர் கொண்ட இந்தக் குழுவில் 17 வீரர்களும் 12 அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

இந்த அதிகாரிகளில் தலைமைப் பயிற்சியாளர், உதவிப் பயிற்சியாளர்கள், மேலாளர், வேகப் பயிற்சியாளர், சுழல் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை 03.30 மணியளவில் எமிரேட்ஸ் விமானமான EK-649 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் இலங்கை அணி துபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு நேரடியாக விமானம் மூலம் செல்லவுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...