டுவிட்டரை வாங்குவதற்கு முடிவு!

Date:

டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டதால் அவர் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருக்கும் நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் 54.20 டொலருக்கு வாங்குவதற்கு எலான் மஸ்க் தீர்மானித்துள்ளார்.

சமூக வலைதளமான டுவிட்டரை வாங்குவதற்கு எலான் மஸ்க் முன்னர் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து 44 பில்லியன் டொலருக்கு அதனை அவருக்கு விற்பதற்கு டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரலில் முடிவு செய்திருந்தது.

இதற்கிடையில் டுவிட்டரில உள்ள போலிக் கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உட்பட சில விபரங்களைத் தரும்படி டுவிட்டர் நிர்வாகத்தடம் எலான் மஸ்க் கோரியிருந்தார்.

2 மாதங்களாகியும் இந்தத் தகவல்கள் கிடைக்காததனால் டுவிட்டரை வாங்கும் முடிவை எலான் மஸ்க் கைவிட்டிருந்தார்.

இதனையடுத்து எலான் மஸ்க் மீது டுவிட்டர் அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தது.

இந்நிலையிலேயே டுவிட்டரின பங்குகளை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...