தாமரை கோபுரத்தில் இருந்து கயிறுகட்டி குதிக்கும் விளையாட்டு!

Date:

பங்கீ ஜம்பிங் என்ற கயிறுகட்டி குதிக்கும் விளையாட்டினை அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் தாமரை கோபுரத்தில் காட்சிப்படுத்துவதற்காக தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் மற்றும் “பன்கீ” நிறுவனம் நேற்று (07) ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன.

இந்த சாகச விளையாட்டில் சுமார் 350 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே குதித்து விளையாடுவது வெளிநாட்டினரால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டாகும்.

ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் சுமார் 100 முறை கோபுரத்தில் இருந்து கீழே குதிக்கும் நிகழ்வுகளை காட்சிப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும், இரவு வேளைகளில் 40 முறை இந்த சாகச நிகழ்வை காட்சிப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தாமரை கோபுரத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.

மேலும், இந்த விடயத்திற்காக சுமார் 50,000 பேர் கொண்ட குழுவொன்று நாட்டை வந்தடையவுள்ளதாகவும், இது இலங்கையின் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்கு நல்லதொரு வாய்ப்பாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...