தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுவிப்பு!

Date:

(File Photo)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண செயற்பாடாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்  கீழ் தண்டனை அனுபவித்து வரும்  சிறைக் கைதிகள் இந்த வாரம் ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது
இதில் நான்கு கைதிகள், கடந்த  வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர், மேலும் மூன்று பேர் நாளை சிறையிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட பின்னர்  பல்வேறு சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக கடுமையான சிறைவாசங்களை அனுபவித்து வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச  தெரிவித்தார்.
நாளை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த நல்லெண்ணச் சைகை மேற்கொள்ளப்பட்டது.
விடுவிக்கப்பட்ட பெரும்பாலான கைதிகள் நீண்ட கால சிறைவாசத்திற்குப் பிறகு தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் கொண்டாட்டங்களுக்காக ஒன்றிணைவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மூன்று கைதிகளின் விடுதலையில்  சிறிது காலதாமதம் ஏற்பட்டது, ஏனெனில் அவர்கள் ஏற்கனவே தங்களின் தண்டனைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தனர்.

அந்த மேல்முறையீடுகள் திரும்பப் பெறப்பட்டவுடன், அவர்கள்  நாளைக்குள் விடுவிக்கப்படுவார்கள். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...