தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுவிப்பு!

Date:

(File Photo)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண செயற்பாடாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்  கீழ் தண்டனை அனுபவித்து வரும்  சிறைக் கைதிகள் இந்த வாரம் ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது
இதில் நான்கு கைதிகள், கடந்த  வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர், மேலும் மூன்று பேர் நாளை சிறையிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட பின்னர்  பல்வேறு சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக கடுமையான சிறைவாசங்களை அனுபவித்து வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச  தெரிவித்தார்.
நாளை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த நல்லெண்ணச் சைகை மேற்கொள்ளப்பட்டது.
விடுவிக்கப்பட்ட பெரும்பாலான கைதிகள் நீண்ட கால சிறைவாசத்திற்குப் பிறகு தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் கொண்டாட்டங்களுக்காக ஒன்றிணைவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மூன்று கைதிகளின் விடுதலையில்  சிறிது காலதாமதம் ஏற்பட்டது, ஏனெனில் அவர்கள் ஏற்கனவே தங்களின் தண்டனைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தனர்.

அந்த மேல்முறையீடுகள் திரும்பப் பெறப்பட்டவுடன், அவர்கள்  நாளைக்குள் விடுவிக்கப்படுவார்கள். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...