2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான எழுபது வீத சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எஞ்சிய 30% உள்நாட்டில் கொள்வனவு செய்யப்படும் என தெரிவித்த கல்வி அமைச்சர், அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலை சீருடைகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் மிலன் ஜயதிலக கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.