பாராளுமன்றத்திற்கு நிகரான மக்கள் சபையொன்றை நிறுவ முடியாது? – சுசில் விளக்கம்

Date:

இந்த நாட்டில் எந்தவொரு நபரும் பாராளுமன்றத்தை போன்று பொது சபையையோ அல்லது வேறு எந்த நிறுவனத்தையோ நிறுவ முடியாது என சபாநாயகர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு நிகரான மக்கள் சபையொன்றை ஸ்தாபிக்க தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தால் கூட இவ்வாறான நிறுவனங்களை நிறுவ முடியாது என தெரிவித்த அமைச்சர், நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளை மாற்ற முடியும் என்றும் இந்த விவகாரம் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அதிக மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று...

டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025; தமிழ் மொழி மற்றும் இலக்கிய பயணத்தின் புதிய தொடக்கம்

2025 டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கனடாவின் டொரோண்டோ...