புத்தளத்தில் திருமணத்திற்கு முன்னரான வழிகாட்டல் பயிற்சி பட்டறை

Date:

கடந்த சில வருட முயற்சியின் திருவினையாக, “ஆனந்தமான திருமணத்தை நோக்கி ஒரு படி” எனும் தொனிப்பொருளில்  அண்மையில் “திருமணத்திற்கு முன்னரான வழிகாட்டல் பயிற்சி பட்டறை” இடம்பெற்றது.

புத்தளம் பெரியபள்ளி மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டுதலின் கீழ், இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அஷ்ஷேக் M.N. AALIF ALI (B.A. IHRDP – PAKISTAN, PSYCHOLOGICAL COUNCELOR) அவர்களால் புத்தளம் பெரியபள்ளி வாயிலில் நடாத்தப்பட்டது.

மேற்படி நிகழ்வில் பயிற்சி பட்டறையை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ் வைபவமும், விஷேட வளவாளருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முக்கியமாக இதில் அண்மையில் திருமணமானவர்கள் மற்றும் திருமணம் முடிக்க இருக்கின்ற இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

அற்பமான காரணங்களுக்காக  விவாகரத்துக்கு நாடிச் செல்லும் திருமண உறவுகளை கட்டிக் காக்க, திருமண வாழ்க்கை தொடர்பான தெளிவான வழிகாட்டல்களை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.

எமது உயரிய இலக்காக, “இது போன்ற பயிற்சி பட்டறையை முடித்ததன் பின்பே திருமண வாழ்க்கையில் நுழைய வேண்டும்” எனும் மனப்பதிவு திருமணம் முடிக்க தயாராக இருக்கும் ஒவ்வொரு இளைஞன், யுவதிக்கும் வரவேண்டும் என்பதுதான்.

இறுதியாக ஆலோசனைகளை வழங்கிய புத்தளம் பெரியபள்ளி மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, சமூகத்தலைமைகள் மற்றும் நலன் விரும்பிகள் இது போன்ற உதவி ஒத்தாசைகளை இனிவரும் காலங்களிலும் இது போன்ற செயற்பாடுகளுக்கு வழங்க முன்வருவீர்கள் என எதிர்ப்பார்க்கிறோம்  என camo volunteer அமைப்பு தெரிவித்துள்ளது.

Casmo Volunteers அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கன்னி முயற்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...