போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்: நாமல்

Date:

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பாவி இளைஞர், சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்களை கைது செய்து பொலிஸில் புகார் அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் செய்வது தவறு என்றும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெலிமடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேநேரம், தனது வீடு, மனைவி வீடு மற்றும் தந்தையின் வீட்டிற்கு தீ வைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் போராட்டத்திற்கு வந்த இளைஞர், சிறுவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதால் எந்த பலனும் ஏற்படாது என்றார்.

அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தின் மூலம் சமூகமயப்படுத்த வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

வெளிநாட்டு இலங்கையர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: நவம்பரில் 673.4 மில். டொலர் பதிவு

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம், நவம்பர் மாதத்தில் 673.4...

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அதிக மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று...