மறைந்த தேரரின் இறுதிக் கிரியைகள் அரச அனுசரணையுடன் மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை!

Date:

மறைந்த அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி வடமத்திய மாவட்ட பிரதான சங்க தலைவர் கலாநிதி   பல்லேகம ஸ்ரீநிவாச  தேரரின் இறுதிக்கிரியைகளை பூரண அரச அனுசரணையுடன் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர்  மஹிபால ஹேரத் ஆகியோர் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நாட்டிலுள்ள மகா சங்கத்தினரிடையே முக்கிய பங்காற்றிய வணக்கத்திற்குரிய பல்லேகம ஸ்ரீநிவாச  தேரர், ரஜரட்ட மக்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரினதும் நலனுக்காக தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்த சங்கப் பிதாவாகும்.

தற்போது தகனக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை 22ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...