மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கஹட்டோவிட்டவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு!

Date:

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி நிர்வாகத்தினரால் வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் அவசியமான பொருட்கள் இன்று (09) பகிர்ந்தளிக்கப்பட்டன.

அத்துடன், வைத்தியசாலை ஊழியர்களுக்கும் அவர்களால் இனிப்புக்களும் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி நிர்வாகத்தினர், கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளை தலைவர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ், அஷ்ஷெய்க் முனீர் முளப்பர் உட்பட பௌத்த மதகுருவும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டிலும் முஅஸ்கர் நிர்வாகத்தினரால் இவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...