முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை!

Date:

முல்லைத்தீவு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை கலைக்க  பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த 3 ஆம் திகதி முதல் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எரிபொருள் கிடைக்காத நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற நிலையில் கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு செல்லும்  மீனவர்களான தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாகவுள்ளதாகவும் இவ்வாறான  அதிகாரிகள் தமக்கு தேவையில்லை எனவும் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தியும் போராடி வருகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 24 சங்கங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கொக்கலாய் வீதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் முந்நூறு முஸ்லிம் மீனவர்களும், மாத்தளன் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும்  மீனவர்களும் முல்லைத்தீவு பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று காலை 11 மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...