இன்று 06:30 முதல் நாளை 06:30 வரை 24 மணி நேரத்திற்கு இயற்கை அனர்த்தங்கள் மற்றும் கனமழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று காலை 08:30 முதல் இன்று காலை 06:30 வரையான காலப்பகுதியில், புஸ்ஸ பிரதேசத்தில் 213 மி.மீ. அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.