ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: முதல் ஒன்பது மாதங்களில் 32 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு!

Date:

ஹிக்கடுவ, திராணகம சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவர்  காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 32 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய விசேட குற்றச்செயல்களை தடுப்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் தென் மாகாணத்தில் புதிய பொலிஸ் பிரிவும் ஸ்தாபிக்கப்பட்டது.

Popular

More like this
Related

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...