6 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச!

Date:

லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது.

இதற்கமைய ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 430 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு தற்போது 395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை, 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 685 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கொண்டைக்கடலை, தற்போது 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் சிகப்பு பருப்பின் விலை 17 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 415 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பு தற்போது 398 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோகிராம் நாட்டு சம்பாவின் விலை 08 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 228 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் நாட்டு சம்பா 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும்  இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசி,  வெள்ளை நாட்டரிசி, வெள்ளை சீனி,  ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

டெங்கு பரவல் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

 மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த சிறை அதிகாரிகளை சந்தித்த அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும்...

காஸாவில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால ஹமாஸ் ஆட்சி கலைப்பு: நிர்வாகப் பொறுப்பை ஏற்கிறது நிபுணர்கள் குழு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை கடந்த 20 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த தன்னாட்சி...