நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம்

Date:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோதலில் சிறைச்சாலைகள் இருந்த பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

சிசிடிவி கெமராக்கள் மற்றும் உடல் பரிசோதனை இயந்திரங்கள் கைதிகளால் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வன்முறை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு இணைந்து முன்னெடுத்துள்ளன.

சிறைச்சாலைக்குள் பின்பற்றப்படும் கடுமையான கட்டுப்பாடுகளை முடக்குவதே இந்த வன்முறையின் பிரதான நோக்கமென கண்டறியப்பட்டுள்ளது. வன்முறைக்கு காரணமாக சில கைதிகள் அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கையாக நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 700 கைதிகள் வரை போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

நீர்கொழும்பு சிறை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

தேர்தல் சட்ட மறுஆய்வு: அனைத்துத் தரப்பினரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணிகள் சங்கம் வேண்டுகோள்!

இலங்கையின் எதிர்காலத் தேர்தல் முறைமை மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை...

இஸ்ரேலிய சிறைகளில் பாலஸ்தீன மருத்துவர்களுக்குக் கொடூர சித்திரவதை: உயிருக்குக் கடும் ஆபத்து என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!

இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவர்களான ஹுசாம் அபு சபியா (Hussam...