நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை

Date:

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை இருக்கும்.

மன்னார் வழியாக காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டை வழியாக மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 55 முதல் 65 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

மன்னார் வழியாக காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டை வழியாக மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக சிலாபத்திலிருந்து பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

Popular

More like this
Related

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி...

அமெரிக்காவின் பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்: அகமது அல்-ஷரா வரவேற்பு

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கான அமெரிக்காவின் பட்டியலிலிருந்து சிரியா அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டிருப்பதைச் சிரிய...

தண்ணீர் என்று நினைத்து ஹைட்ரஜன் பெராக்சைடைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!

கம்பளையின் புபுரஸ்ஸ டெல்டாவத்த பகுதியில், மூன்று வயது சிறுமி ஒருவர், தண்ணீர்...

42வது மீலாதுன் நபி தேசிய விழாவை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற “Welcome to Our Mosque” நிகழ்ச்சித்திட்டம்

42ஆவது தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு, கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பை...